Kathir News
Begin typing your search above and press return to search.

நெல்லையில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி.!

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவுபடி கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஒன்றாக கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது.

நெல்லையில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி.!

ThangaveluBy : Thangavelu

  |  10 May 2021 11:29 AM GMT

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவுபடி கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஒன்றாக கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது.

மாநகாட்சி முழுவதும் கிருமி நாசினிகளை தூய்மை பணியாளர்கள் தெளித்து வருகின்றனர். இதற்கு பல விதமான இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ட்ரோன் மூலமாக கிருமிநாசினி தெளிக்கும் சோதனை முயற்சி நெல்லை மாநகர பகுதியில் நடைபெற்றது.

பாளை மண்டல பகுதிகளில் உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் ட்ரோன் மூலமாக கிருமி நாசினி தெளிக்கும் பணியினை ஆய்வு செய்தார். உடன் சுகாதார ஆய்வாளர் நடராஜன் மற்றும் பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News