Kathir News
Begin typing your search above and press return to search.

நெல்லை: காவலர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய ஆணையர்.!

கொரானா தொற்று பரவாமல் தடுப்பது சம்பந்தமாக அனைவருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது.

நெல்லை: காவலர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய ஆணையர்.!

ThangaveluBy : Thangavelu

  |  9 April 2021 8:34 AM GMT

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கடந்த ஆண்டு தொற்று ஏற்பட்டதை போன்று உயரத் தொடங்கியுள்ளது. எனவே இதில் இருந்து தப்பிக்க அனைவரும் முககவசம் மற்றும் கபசுர குடிநீர் போன்றவைகளுக்கு மீண்டும் திரும்ப தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று நெல்லையில் மீண்டும் உயர்ந்து வரும் நிலையில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு காவல் துணை ஆணையாளர் சீனிவாசன் கபசுர குடிநீர் வழங்கினார்.

மேலும் கொரானா தொற்று பரவாமல் தடுப்பது சம்பந்தமாக அனைவருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News