Kathir News
Begin typing your search above and press return to search.

சாலை பாதுகாப்பு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்த நெல்லை எஸ்.பி.!

சாலை பாதுகாப்பு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்த நெல்லை எஸ்.பி.!

சாலை பாதுகாப்பு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்த நெல்லை எஸ்.பி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Jan 2021 3:54 PM GMT

நெல்லையில் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து எஸ்.பி., மணிவண்ணன் துவக்கி வைத்தார்.

சாலை விபத்துக்களை கட்டுப்படுத்தவும், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி இன்று நெல்லை மாவட்ட காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை இணைந்து 32வது சாலை பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு பேரணியை வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் முன்னிலையில் எஸ்.பி. மணிவண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியும், பொதுமக்களின் வாகனங்களின் முன்பக்க முகப்பு விளக்குகளில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் எதிரே வரும் வாகனங்களுக்கு கண் கூசாமல் இருக்க கருப்பு நிற ஸ்டிக்கர்களை ஒட்டி, சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து விபத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் பெண் காவலர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். மேலும் பேரணி மாவட்ட ஆயுதப்படையில் துவங்கி முன்னீர்பள்ளம் வரை பயணம் செய்து இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் மற்றும் சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்றது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News