Kathir News
Begin typing your search above and press return to search.

வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ! மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ! மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
X

ThangaveluBy : Thangavelu

  |  11 Sept 2021 6:17 AM

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் வடகிழக்கு வங்க கடலில் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக ஒடிசா, பஞ்சாப், டெல்லி, மேற்கு வங்காளம், ஆந்திரா உட்பட வடமாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் வங்க கடல் பகுதியில் பலத்த கடல் காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Source, Image Courtesy: Maalaimalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News