Begin typing your search above and press return to search.
தமிழக மக்களின் நலனுக்காக உழைப்பேன் ! - புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி!
ஆளுநர் விதிகளுக்கு உட்பட்டு, தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கு உழைப்பேன் என்று புதிய ஆளுநராக பொறுப்பேற்ற ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

By :
ஆளுநர் விதிகளுக்கு உட்பட்டு, தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கு உழைப்பேன் என்று புதிய ஆளுநராக பொறுப்பேற்ற ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் 15வது ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனிடையே பதவி ஏற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.என்.ரவி வணக்கம் என்று தமிழில் கூறி தனது பேச்சை தொடங்கினார்.
அப்போது அவர் பேசும்போது, பழம்பெருமை மிக்க தமிழ்நாட்டில் ஆளுநராக பதவியேற்றதில் பெருமைப்படுகிறேன். பழங்கால தமிழ் மொழியை கற்க ஆசை படுகிறேன். மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Puthiyathalamurai
Next Story