மீண்டும் போராட்டத்தில் இறங்கிய பகுதி நேர ஆசிரியர்கள்!
By : Sushmitha
தமிழக அரசு அறிவிப்பை வெளியிடும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என பகுதி நேர ஆசிரியர்களின் பிரதிநிதி பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் சிவகங்கை மாவட்ட பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தின் பொருளாளர் பாலசுப்பிரமணியன், கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியராக பணியாற்றி வரும் நாங்கள் ரூபாய் பத்தாயிரம் ரூபாய் ஊதியத்தில் எங்களது குடும்ப செலவுகளை சமாளித்து வருகிறோம், ஆனால் தேவைகளை நிறைவேற்றுவதற்கு இந்த ஊதியம் போதுமானதாக இல்லை, பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரி பல போராட்டங்கள் நடத்தியும் அரசு எங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் உள்ளது.
ஒவ்வொரு முறை போராட்டம் நடத்தும் பொழுதும் அதிகாரிகளின் நம்பிக்கை வாக்குறுதியை நம்பி செல்லும் எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது! இதனால் இந்த முறை எங்களது கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்று அறிவிப்பாக வெளியிடும் வரை உண்ணாவிரத போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று தெரிவித்தார். மேலும் சென்னை பேராசிரியர் அன்பழகன் பள்ளி வளாகத்தில் திமுக தனது வாக்குறுதி நிறைவேற்ற வலியுறுத்தி கண்களை காட்டிக் கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தில் 2 வது நாளாக இன்றும் ஈடுபட்டனர்.
Source - The Hindu & Thanthi Tv