Kathir News
Begin typing your search above and press return to search.

வன்முறையில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை தேவை.. இந்து முன்னணி வலியுறுத்தல்..

வன்முறையில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை தேவை.. இந்து முன்னணி வலியுறுத்தல்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  29 Oct 2023 12:50 AM GMT

வன்முறையில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கூறப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக இந்து முன்னணி மாநில தலைவர் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இது பற்றி அவர் கூறும் பொழுது, ரவுடிகளான கருக்கா வினோத் கவர்னர் மாளிகை மீது இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசி இருக்கிறார், நல்ல வேலையாக அவை தீப்பற்றி வெடிக்கவில்லை.


அப்படி ஏதாவது நடந்து இருந்தால் அங்கு பணியில் இருந்த போலீசார் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். முதல் நாள் வந்தவன், மீண்டும் குற்ற செயலில் ஈடுபடும் தைரியம் எங்கிருந்து வருகிறது? ஏதாவது நடந்து இருந்தால் என்ன செய்வது, 10 நாட்களில் ஜாமின் கிடைத்துவிடும் என்ற தைரியம் தானே! தி.மு.க அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஆளும் கட்சிக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசுவது தொடர்ச்சியான சம்பவங்களாக நடைபெற்று வருகிறது.


இது ஒருவித பாசிச மனநோய் எதிர் கருத்து தெரிவிப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தும் ஒரு நிலையை உருவாக்குகிறது. மேலும் கருத்து தெரிவிப்பவர்கள் மீது தாக்குதல் நடத்துவதால் பயத்தை உருவாக்குகிறது, தொடர்ச்சியாக அரங்கேறி வருவது, இது போல் நடக்கிறது என்பது வெளிப்படையான உண்மையாகும். எனவே இது போன்ற வன்முறை செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது போலீசார் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News