Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க ஆட்சியில் தமிழகம் ரவுடிகளின் கூடாரமாக மாறி உள்ளதா.. அண்ணாமலையின் பரபரப்பு குற்றச்சாட்டு..

தி.மு.க ஆட்சியில் தமிழகம் ரவுடிகளின் கூடாரமாக மாறி உள்ளதா.. அண்ணாமலையின் பரபரப்பு குற்றச்சாட்டு..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  1 Nov 2023 4:56 AM GMT

தமிழகத்தில் திமுக ஆட்சியில் ரவுடிகளின் கூடாரமாக மாறி இருப்பதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார். இது பற்றி அவர் கூறும் பொழுது, "பெரம்பலூர் கல்குவாரி ஏல விண்ணப்பத்தின் போது, நடந்த மோதல் தொடர்பாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உதவியாளர் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக ஆட்சியில் தமிழகம் ரவுடிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருக்கிறார்.


இது குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலை தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பெரம்பலூர் மாவட்டத்தில் கல்குவாரிகளுக்கு நடைபெற இருந்த ஏலத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்தப்புள்ளி கொடுக்க வந்த பெரம்பலூர் கவுல்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவரும் தமிழக பாஜக தொழில்துறை பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் கலைச்செல்வன் மற்றும் தொழில்துறை பிரிவு மாவட்டத் தலைவர் ஆகியோரை திமுக ரவுடி கும்பல் தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.


மேலும், திமுகவினரைத் தடுக்க முயற்சித்த, கனிம வளத்துறை துணை இயக்குனர் ஜெயபால் மற்றும் உதவி புவியியலாளர் இளங்கோவன், வருவாய் ஆய்வாளர் குமரிஆனந்தன் ஆகிய அரசு அதிகாரிகளையும், பாதுகாப்பு பணியிலிருந்த டிஎஸ்பி திரு. பழனிச்சாமி உள்ளிட்ட காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News