Kathir News
Begin typing your search above and press return to search.

43 இடங்களில் NIA திடீர் சோதனை - திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகின!

கோவையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக 43 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை.

43 இடங்களில் NIA திடீர் சோதனை - திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகின!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  11 Nov 2022 11:37 AM GMT

கோவை கார் வெடிப்பு சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பில் ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இந்த கார் வெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமை என்று அழைக்கப்படும் NIAக்கு மாற்றப்பட்டு உள்ளது. அதன் பெயரில் என்னையே அதிகாரிகள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகமது அசாரு உள்ளிட்ட ஆறு பேரை சென்னை அழைத்து வந்து பூந்தமல்லியில் உள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜர் படுத்தி, பின்னர் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.


தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக கோவில் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சேர்ந்தவர்கள் செயல்பட்டு வருகிறார்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 43 இடங்களில் நேற்று NIA சோதனைகள் களமிறங்கினார்கள். இதில் சென்னையில் பொருத்தவரை ஐந்து இடங்களில் இந்த சோதனை நடந்தது. சோதனை நடைபெற்ற வீடுகள் முன்பு பணிச போலீசார் படுத்த பாதுகாப்பில் இருந்தார்கள். வீடுகளில் இருந்து யாரும் வெளியேற அனுமதிக்கவில்லை, அத்துடன் வீட்டிற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. சோதனை நடைபெற்ற 33 இடங்களிலும் துப்பாக்கி எழுதிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.


காலை 5 மணிக்கு தொடங்கிய சோதனை பிற்பகல் 3 மணிக்கு முடிவு அடைந்தது. 10 மணி நேரம் நடந்த சோதனையில் சிலரின் வீடுகளில் இருந்த மொபைல், மின்னணு சாதனங்கள், மடிக்கணினி என பல பொருட்கள் கைப்பற்றதாக கூறப்படுகிறது. ஆனால் கைப்பற்றப்பட்ட பொருட்களின் விவரங்கள் தெரியவில்லை. காரில் வெடிபொருட்கள் நிரம்பி மதப் பிரச்சினை உருவாக்கும் விதத்தில் மக்கள் அதிக கூடும் இடங்களில் தற்போது தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், எதிர்பாராமல் குண்டுவெடித்த அவரை பலியானதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

Input & Image courtesy: Asianet News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News