Kathir News
Begin typing your search above and press return to search.

ஆற்று மணலை வாரி சுருட்டிய பாதிரியாருக்கு ஜாமீன் கூட கிடையாது: சி.பி.சி.ஐ.டி அடுத்த பிளான் என்ன?

No bail for Kerala bishop, priests in illegal sand mining case

ஆற்று மணலை வாரி சுருட்டிய பாதிரியாருக்கு ஜாமீன் கூட கிடையாது: சி.பி.சி.ஐ.டி அடுத்த பிளான் என்ன?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 Feb 2022 2:29 PM GMT

சட்டவிரோத மணல் அள்ளியதாக சிபிசிஐடியால் கைது செய்யப்பட்ட கேரளாவைச் சேர்ந்த பிஷப் மற்றும் 5 பாதிரியார்களின் ஜாமீன் மனுவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டதாக ஜார்ஜ் சாமுவேல் (56), ஷாஜி தாமஸ் (58), ஜிஜோ ஜேம்ஸ் (37), ஜோஸ் சமகலா (69), ஜோஸ் களவியல் (53) ஆகிய 5 பாதிரியார்கள் பிஷப் சாமுவேல் மார் இரேனியோஸ் (69) ஆகியோர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில், அம்பாசமுத்திரம் அருகே உள்ளது பொட்டல் கிராமம். அங்கு கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த கத்தோலிக்க சபைக்கு சொந்தமான நிலம் உள்ளது. அதில், கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல், கேரள பாதிரியார் மனுவேல் ஜார்ஜ் என்பவர், எம் சாண்ட் தயாரிக்கும் ஆலையை நடத்தி வந்துள்ளார்.

எம் சாண்ட் எனப்படும் செயற்கை மணல் தயாரிப்பதாக கூறி அனுமதி வாங்கிவிட்டு, அங்கிருந்து சுமார் முப்பதாயிரம் ஆயிரம் கியூபிக் மீட்டர் ஆற்று மணலை முறைகேடாக கடத்தியுள்ளார். இது குறித்து உயிர்நீதிமன்ற உத்தரவின் படி, வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் பாதிரியார் மனுவேல் ஜார்ஜ் மீது நடவடிக்கை மேற்கொண்டனர்.

அவர் நடத்தி வந்த எம்.சாண்ட் நிறுவனத்திற்கு, 9.50 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சேரன்மகாதேவி சப் - கலெக்டர் பிரதீக் தயாள் இந்த உத்தரவை பிறப்பித்தார். மணல் கடத்தலில் உதவிய சமீர் என்பவரும் கைது செய்யப்பட்டார். பாதிரியார் மணல் கடத்தலில் ஈடுபட்ட சமயத்தில், கனிமவளத்துறை உதவி இயக்குனராக, சமீரின் உறவினர் சபீதா பொறுப்பு வகித்து வந்துள்ளார். அவர் தற்போது துாத்துக்குடிக்கு மாற்றப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பிஷப் மற்றும் ஜோஸ் சம காலா ஆகியோருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.








Next Story
கதிர் தொகுப்பு
Trending News