Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு வராது.. கோவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு வராது.. கோவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.!

ThangaveluBy : Thangavelu

  |  21 July 2021 8:27 AM GMT

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களின் அவர் கூறியதாவது: தமிழகத்துக்கு மேலும் 10 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகிறது. இலவசமாக போடப்படும் தடுப்பூசிகளை அதிகளவு விரும்புகின்றனர்.


மேலும், சிஎஸ்ஐஆர் பங்களிப்புடன் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு வராது. இன்று மாலை 5,42,280 கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வருகின்றது என்றார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News