Kathir News
Begin typing your search above and press return to search.

வேட்புமனு தாக்கல் மார்ச் 12.. வேட்புமனு திருப்பெற கடைசி நாள் 22ம் தேதி.. தேர்தல் ஆணையம் தகவல்.!

வேட்புமனு தாக்கல் மார்ச் 12.. வேட்புமனு திருப்பெற கடைசி நாள் 22ம் தேதி.. தேர்தல் ஆணையம் தகவல்.!

வேட்புமனு தாக்கல் மார்ச் 12.. வேட்புமனு திருப்பெற கடைசி நாள் 22ம் தேதி.. தேர்தல் ஆணையம் தகவல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Feb 2021 5:36 PM GMT

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோர டெல்லியில் செய்தியாளர்களை சந்திந்து வருகிறார். அப்போது தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறார்.

ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் எனவும், 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் அவர் கூறினார். மேலும், மார்ச் 12ம் தேதி மனு தாக்கல் தொடக்கம், மார்ச் 19ம் தேதி நிறைவடைகிறது.

மார்ச் 20ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். வேட்புமனு திரும்பப்பெறுவதற்கு மார்ச் 22 வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறுகிறது. 3.18 கோடி பெண்களும், 3.08 கோடி ஆண்களும், 7,200 மூன்றாம் பாலினத்தவர்கள் என்று மொத்தமாக 6.26 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர் என கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News