Kathir News
Begin typing your search above and press return to search.

இதுவரை ஒரு முறை கூட கிருஸ்துவ ஆசிரியை தேசியக்கொடி ஏற்றியதில்லை - பேடரஹள்ளி மக்கள் கூறும் பகீர் தகவல்

தேசியக்கொடி ஏற்ற மறுத்த கிறிஸ்தவ தலைமையாசிரியர் மீது பள்ளி கல்வித்துறை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

இதுவரை ஒரு முறை கூட கிருஸ்துவ ஆசிரியை தேசியக்கொடி ஏற்றியதில்லை - பேடரஹள்ளி மக்கள் கூறும் பகீர் தகவல்

Mohan RajBy : Mohan Raj

  |  17 Aug 2022 3:18 PM GMT

தேசியக்கொடி ஏற்ற மறுத்த கிறிஸ்தவ தலைமையாசிரியர் மீது பள்ளி கல்வித்துறை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் நேற்று முன்தினம் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது, தர்மபுரி மாவட்டம் பேடரஹள்ளி அரசு பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி தேசியக்கொடி ஏற்றவில்லை, மேலும் துணை தலைமை ஆசிரியர் முருகன் ஏற்றிய தேசியக்கொடிக்கும் தலைமை தலைமை ஆசிரியை மரியாதை செலுத்தாமல் இருந்துள்ளார்.

இது குறித்து ஊர் மக்கள் அவரிடம் கேட்ட பொழுது, 'உலகளாவிய கிறிஸ்தவ அமைப்பில் நான் உள்ளேன், யாக்கோபுக்கு மட்டும் தான் வணக்கம் செலுத்துவோம்' என தெரிவித்துள்ளார். இதனை முன்னிட்டு பேடரஹள்ளி மக்கள் தர்மபுரி பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்படி விசாரிக்க தருமபுரி மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது, 'பேடரஹள்ளி தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி நான்காண்டுகளுக்கு மேல் பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். இவர் பணிக்கு சேர்ந்த முதல் தேசிய கொடி ஏற்றியதும் இல்லை, தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தவும் இல்லை. மேலும் சமத்துவ பொங்கல் விழா நடத்தவும் அனுமதிக்கவில்லை. இவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்' என தெரிவித்துள்ளனர்.

Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News