Kathir News
Begin typing your search above and press return to search.

பள்ளி மாணவர்களுக்கு சத்து மாத்திரை: தமிழக அரசு அறிவிப்பு.!

பள்ளி மாணவர்களுக்கு சத்து மாத்திரை: தமிழக அரசு அறிவிப்பு.!

பள்ளி மாணவர்களுக்கு சத்து மாத்திரை: தமிழக அரசு அறிவிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 Feb 2021 7:47 PM GMT

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் கடந்த 10 மாதங்களுக்கு பின்னர் திறக்கப்பட்டது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்தவுடன் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்ட நிலையில், 9,11ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி தமிழகம் முழுவதும் 19 லட்சம் மாணவர்களுக்கு நாளை மறுநாள் முதல் பள்ளிகளில் இந்த மாத்திரைகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகளுக்கு பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News