Kathir News
Begin typing your search above and press return to search.

கருப்பு பூஞ்சையும் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணையுங்கள்.. ஓ.பன்னீர்செல்வம்.!

கொரோனா தொற்றை தொடர்ந்து கருப்பு பூஞ்சையும் தமிழக மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த நோயையும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருப்பு பூஞ்சையும் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணையுங்கள்.. ஓ.பன்னீர்செல்வம்.!

ThangaveluBy : Thangavelu

  |  29 May 2021 6:01 AM GMT

கொரோனா தொற்றை தொடர்ந்து கருப்பு பூஞ்சையும் தமிழக மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த நோயையும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது பற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: நோய் இன்னதென்று கண்டறிந்து, பின் அது உண்டான காரணத்தை அறிந்து, அதன்பின் அந்நோயை படிப்படியாக நீக்கும் வழிமுறையைக் கையாண்டு, நோய் நீங்கும்படி மருத்துவம் செய்ய வேண்டும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க கொரோனா நோய்த் தொற்றினை முற்றிலும் களைவதற்கு உண்டான நடவடிக்கைகளை மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் எடுத்து வருகின்றன.






இந்தச் சூழ்நிலையில், பட்ட காலிலே படும் என்பதற்கேற்ப கொரோனாவில் இருந்து குணமடையும் நோயாளிகள், கருப்பு பூஞ்சை என்ற நோயாயல் பாதிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் இதுவரை 11,717 நபர்கள் கருப்புப் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், பத்திரிகையில் செய்தி வெளி வந்துள்ளது.

இந்த நோயினால் குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோயினால் 226 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மூன்று நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் ஓசூர் பகுதியில் கருப்பு பூஞ்சை நோய் வேகமாக பரவி வருவதாகவும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு ஆளாவதாகவும், இத்தொற்றுக்கான மருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இல்லை என்றும், ஒரு டோஸ் மருந்து பல ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன.




கருப்பு பூஞ்சை தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களை சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவிடுவதாகவும், அம்மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனரே தெரிவித்ததாக பத்திரிகையில் செய்தி வெளி வந்துள்ளது. இந்த நோய்த் தொற்றின் பரவல் அதிகரிக்கும்பட்சத்தில் அதை சமாளிப்பது என்பது அரசுக்கு மிகப்பெரிய சவாலாகிவிடும்.

எனவே வரும் 'வருமுன் காப்போம்' என்பதற்கேற்ப அரசின் செயல்பாடு இருப்பது அவசியம் என்பதோடு மட்டுமல்லாமல், இதற்குத் தேவையான மருந்தினை போதுமான அளவில் இருப்பில் வைத்துக்கொள்ளவும், இந்த நோயினை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News