சென்னை அருகே பழங்கால வெடிகுண்டு கண்டுபிடிப்பு.!
வெடிகுண்டின் முன்பக்கத்தில் தீ வைத்தால் மட்டுமே வெடிக்கும் தன்மை கொண்டது என வெடிகுண்டு நிபுணர்கள் விளக்கம் அளித்தனர்.
By : Thangavelu
சென்னை புறநகர் பகுதியான பெரியபாளையத்தில் கடந்த 7ம் தேதி அங்குள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாட சென்றுள்ளனர்.
அப்போது ஸ்டம்புகளை மண்ணில் புதைப்பதற்காக குழி தோண்டியுள்ளனர். அப்போது ஒரு பெரிய இரும்பு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அச்சிறுவர்கள் ஊர்மக்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இது பற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற போலீசார் சிறுவர்கள் கண்டுப்பிடித்தது பழங்கால வெடிகுண்டு என தெரியவந்தது. இது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் 8 கிலோ எடை கொண்ட பழங்கால வெடிகுண்டை கைப்பற்றினர்.
இது பற்றிய ஆய்வில், வெடிகுண்டின் முன்பக்கத்தில் தீ வைத்தால் மட்டுமே வெடிக்கும் தன்மை கொண்டது என வெடிகுண்டு நிபுணர்கள் விளக்கம் அளித்தனர்.
பழங்கால வெடிகுண்டு கண்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் அச்சுற்றியுள்ள மற்ற கிராம மக்களுக்கு தகவல் தெரிந்தது. ஏராளமான பொதுமக்கள் அந்த இடத்தை பார்வையிட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.