Kathir News
Begin typing your search above and press return to search.

பாழடைந்து இடித்து விடும் நிலையில் பெருமாள் கோவில்: நடவடிக்கை எடுக்குமா அறநிலையத்துறை?

பாழடைந்து இடிந்து விழும் நிலையில் யோக நரசிங்க பெருமாள் கோவில் இருக்கிறது.

பாழடைந்து இடித்து விடும் நிலையில் பெருமாள் கோவில்: நடவடிக்கை எடுக்குமா அறநிலையத்துறை?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 Nov 2022 6:51 AM GMT

சுமார் 500 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவில் தற்பொழுது இடிந்து பெறும் நிலையில் உள்ளது. அதனை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புூரணி பகுதியில் பழமையான கோவில் அதிக அளவில் இருக்கின்றன. மேலும் குன்றக்குடி தேவஸ்தானம், சிவகங்கை தேவஸ்தானம் அறநிலை துறைக்கு சொந்தமான கோவில்கள் மற்றும் கிராமத்து தெய்வங்கள் என அனைத்து ஊர்களிலும் பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன.


இதில் மட்டியூர் என்று அழைக்கப்படும் எஸ்.பி மங்கலத்தில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட பழமை வாய்ந்த கோவில் உள்ளது. அதுதான் யோக நரசிங்க பெருமாள் கோவில் இந்த கோவில் 500 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றில் வடக்கு பகுதியில் மட்டியூர், தென் பகுதியில் அருவியூர் என இரண்டு பகுதிகளின் கிராமம் தெய்வமாக இருக்கிறது. அப்போதைய மன்னர்களால் போர் தொடுக்கப்பட்டு அழிக்கப்பட்ட கிராமங்களான மட்டியூர், அருவியூர் என்ற கிராமங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.


தற்பொழுது திண்டுக்கல், திருப்பத்தூர் சாலையில் எஸ்வி மங்கலம் என்று அழைக்கப்படும் மட்டியூர் பகுதியில் உள்ள யோக நரசிங்க பெருமாள் கோவில் பாலடைந்த நிலையில் இருக்கிறது. இந்த கோவில் பெருமாள் கோவில் என்று மக்களுடன் மக்களால் அழைக்கப்பட்டு வருகிறது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றார்கள். ஆனால் தற்பொழுது இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் பராமரிப்பு இன்று கிடைக்கிறது. கோவில் சிதலமடைந்து மண்டபத்தும் கீழே விழும் நிலையில் உள்ளது. மழைக்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்று அபாய நிலையில் இருப்பதால் இதனை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

Input & Image courtesy: Thanthi News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News