Kathir News
Begin typing your search above and press return to search.

மெரினாவில் குளிக்கச் சென்ற 9ம் வகுப்பு மாணவர்களில் ஒருவர் உயிரிழப்பு.!

மெரினாவில் குளிக்கச் சென்ற 9ம் வகுப்பு மாணவர்களில் ஒருவர் உயிரிழப்பு.!

மெரினாவில் குளிக்கச் சென்ற 9ம் வகுப்பு மாணவர்களில் ஒருவர் உயிரிழப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Feb 2021 6:27 PM GMT

சென்னை, மெரினா கடலில் குளிக்கச் சென்ற 2 மாணவர்களில் ஒரு மாணவர் உயிரிழந்தார். மற்றொரு மாணவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மெரினா கடற்கரை எழிலகம் எதிரில் உள்ள கடலில் 2 மாணவர்களும் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது திடீரென்று ராட்சத அலை வந்ததில் இருவரும் கடலுக்கு அடித்து சென்றனர்.

இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு மீட்பு படையினர் மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு மாணவன் உயிருடன் மீட்கப்பட்டார். மற்றொரு மாணவன் சடலமாக மீட்கப்பட்டான். போலீசார் விசாரணையில் இறந்து போன மாணவன் பெயர் தனுஷ் என்பதும், மற்றொரு மாணவன் பெயர் லோகேஷ் என்பதும் தெரியவந்தது. இந்த 2 மாணவர்களும் 9ம் வகுப்பு படித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News