Kathir News
Begin typing your search above and press return to search.

பார்சல் பிரியாணியில் கறி இல்லை: கடை ஊழியரை தாக்கிய ரபீக் கைது!

பார்சல் பிரியாணியில் கறி இல்லை: கடை ஊழியரை தாக்கிய ரபீக் கைது!

ThangaveluBy : Thangavelu

  |  7 March 2022 9:27 AM GMT

பார்சல் பிரியாணியில் கறி அதிகமாக இல்லை என்று கடையில் உள்ள கேஷியரை கரண்டியால் தாக்கிய விவகாரங்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் தலைமறைவாகியுள்ளார்.

சென்னை, பெரியமேடு ஊத்துக்காட்டான் தெருவில் பிரியாணி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தக் கடையில் கேஷியராக பணியாற்றி வருபவர் விக்னேஷ். இதனிடையே பெரியமேடு பகுதியை சேர்ந்த ஓட்டுநர் ரபீக், சலீம் மற்றும் குல்லா சண்முகம் உள்ளிட்டோர் பிரியாணி கடையில் பிரியாணி பார்சல் வாங்கியுள்ளனர். அப்போது கறி அதிகமாக இல்லை என்று கூறி கேஷியர் விக்னேஷை கரண்டியால் தாக்கியுள்ளனர். இது பற்றிய காட்சிகள் கடையில இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இது குறித்து கேஷியர் விக்னேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநர் ரபீக் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சலீம், சண்முகம் இருவரும் தலைமறைவாகியுள்ளார். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News