Begin typing your search above and press return to search.
ஆன்லைன் வகுப்பு தொடரும்.. சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு.!
ஆன்லைன் வகுப்பு தொடரும்.. சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு.!

By :
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டிருந்தது. இதனிடையே நடப்பு கல்வியாண்டு பாடங்கள் ஆன்லைன் வாயிலாகவே நடத்தப்பட்டு வந்தது.
தொற்று படிப்படியாக குறைந்து வரும் சூழலில் பள்ளி, மற்றும் கல்லூரி வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகிறது. இதனிடையே வருகின்ற 8ம் தேதி முதல் கல்லூரி வகுப்புகள் அனைத்தும் தொடர்ந்து நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னை பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடைமுறையே தொடரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூன் மாதத்திற்கு பிறகு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. பாடங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் மட்டும் பல்கலைக்கழகத்திற்கு வந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story