Kathir News
Begin typing your search above and press return to search.

இனிமேல் பேருந்து பயணத்தில் சைவம் மட்டுமே: அசைவத்திற்கு இடமில்லை! தி.மு.க. அரசு போட்ட புதிய உத்தரவு!

இனிமேல் பேருந்து பயணத்தில் சைவம் மட்டுமே: அசைவத்திற்கு இடமில்லை! தி.மு.க. அரசு போட்ட புதிய உத்தரவு!

ThangaveluBy : Thangavelu

  |  25 March 2022 3:28 AM GMT

தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தப்படுகின்ற நெடுஞ்சாலை உணவகங்களில் சைவ உணவு மட்டும்தான் விற்பனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் நின்று செல்வதற்கு ஒரு வருடத்திற்கு உரிமம் பெறுவதற்கு உணவகங்களிடம் இருந்து ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. அதில் அரசு பேருந்துகள் தங்களது உணவகத்தில் நிறுத்தம் செய்ய உணவகங்களுக்கான நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு பரிமாறப்படும் உணவு வகைகள் மிகவும் சுவையாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டும். மேலும் சைவ உணவு மட்டும்தான் தயார் செய்ய வேண்டும். அது மட்டுமின்றி பயணிகளின் நலன் கருதி கழிப்பிட வசதி இலவசமாக வைக்க வேண்டும். உணவகத்தில் இருக்கின்ற கழிவறைகள் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Puthiyathalaimurai

Image Courtesy: Flickr

Next Story
கதிர் தொகுப்பு
Trending News