Kathir News
Begin typing your search above and press return to search.

நீர் பாசனத்திற்காக மணிமுத்தாறு அணை திறப்பு.. அமைச்சர்கள், ஆட்சியர் பங்கேற்பு.!

நீர் பாசனத்திற்காக மணிமுத்தாறு அணை திறப்பு.. அமைச்சர்கள், ஆட்சியர் பங்கேற்பு.!

நீர் பாசனத்திற்காக மணிமுத்தாறு அணை திறப்பு.. அமைச்சர்கள், ஆட்சியர் பங்கேற்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Dec 2020 11:26 AM GMT

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையின்படி நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணை நீர் தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக, மாண்புமிகு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, ஆட்சியர் வே.விஷ்ணு ஆகியோர் அணையிலிருந்து நீர் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த அணை திறப்பால் விவசாயிகள் சாகுபடி செய்வதற்கு வசதியாக இருக்கும் என்று அமைச்சர் கூறினார். விவசாயிகளின் நலனுக்காக தமிழக முதலமைச்சர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இந்த ஆண்டு விவசாய பணிகளுக்க போதுமான நீர் இருப்பு இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News