Kathir News
Begin typing your search above and press return to search.

லண்டனில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள்.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2ம் அலை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொற்றால் இறப்பவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

லண்டனில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள்.!

ThangaveluBy : Thangavelu

  |  4 May 2021 4:16 AM GMT

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2ம் அலை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொற்றால் இறப்பவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வழக்கத்தை விட 4 மடங்கு நோயாளிகள் தினமும் மருத்துவமனைக்கு வருவதால் படுக்கை வசதிகள் அதிகளவு தேவை ஏற்பட்டுள்ளது. இதே போன்று தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு மருத்துவ உபகரணங்கள் வந்து கொண்டிருக்கிறது.





இந்நிலையில், லண்டனில் இருந்து இந்திய விமானப்படை சிறப்பு விமானம் மூலம் 46.6 லிட்டர் திறன் கொண்ட 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இன்று அதிகாலை தமிழகம் வந்தடைந்துள்ளது. இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறை தட்டுப்பாடு நீங்கும் என கூறப்படுகிறது. அது மட்டுமின்றி இந்தியாவிலும் ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News