Kathir News
Begin typing your search above and press return to search.

பாலக்காடு, சென்னை தினசரி விரைவு ரயில்.. டிசம்பர் 8ம் தேதி முதல் தொடங்கும்.!

பாலக்காடு, சென்னை தினசரி விரைவு ரயில்.. டிசம்பர் 8ம் தேதி முதல் தொடங்கும்.!

பாலக்காடு, சென்னை தினசரி விரைவு ரயில்.. டிசம்பர் 8ம் தேதி முதல் தொடங்கும்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Dec 2020 1:52 PM GMT

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை பொது போக்குவரத்தான ரயில் சேவை முற்றிலும் முடக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து சரக்கு ரயில்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும் ஒரு சில ரயில்களை தவிர மற்ற ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.


இதன் பின்னர் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் ரயில்களை இயக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கும் சூழலில், முன்பதிவோடு வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களும் உள் மாநிலங்களுக்குள் இயங்கும் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் தேவைக்கு ஏற்றாற்போல அவ்வப்போது சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் இருந்து பாலக்காடு செல்லும் தினசரி விரைவு ரயில் டிசம்பர் 9ம் தேதியில் இருந்து இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக பாலக்காட்டில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயில் டிசம்பர் 9 முதல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News