Kathir News
Begin typing your search above and press return to search.

பரோலில் இருந்த பேரறிவாளனுக்கு தருமபுரி மருத்துவமனையில் சிகிச்சை!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் பேரறிவாளனுக்கு உடல் நலக்குறைவு காரணமாக 30 நாட்கள் பரோல் அளிக்கப்பட்டது.

பரோலில் இருந்த பேரறிவாளனுக்கு தருமபுரி மருத்துவமனையில் சிகிச்சை!

ThangaveluBy : Thangavelu

  |  27 Dec 2021 10:22 AM GMT

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் பேரறிவாளனுக்கு உடல் நலக்குறைவு காரணமாக 30 நாட்கள் பரோல் அளிக்கப்பட்டது.

இதனிடையே தனது மகனின் பரோலை நீட்டிக்க வேண்டும் என்று தாயார் அற்புதம்மாள் தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி கடந்த 7 முறை பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மீண்டும் பரோல் நீட்டிக்க மனு அளித்திருந்தார். அதன்படி 8வது முறையாக பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனிடையே பரோலில் இருந்த பேரறிவாளனுக்கு திடீரென்று உடல்நலக்குறை ஏற்பட்டது. இதனால் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை திருப்பத்தூரில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News