Begin typing your search above and press return to search.
குற்றாலம் மெயின் அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி!
குற்றாலம் மெயின் அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி!
By : Kathir Webdesk
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பெய்து வரும் கனமழையால் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அருவியில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனால் அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இதனையடுத்து சுற்றுலாப்பயணிகள் யாரையும் குளிப்பதற்கு அனுமதிக்கவில்லை. இந்நிலையில், தற்போது மழை நின்றுள்ள காரணத்தினால் அருவியில் வெள்ளம் குறைவாக காணப்படுகிறது. இதனை தொடர்ந்து அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
Next Story