Kathir News
Begin typing your search above and press return to search.

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்... ஈடுபட்ட பள்ளி சிறுவர்கள்... வாய் தகராறினால் இப்படி பண்ணுவதா?

திண்டுக்கல்லில் சிறுவர்கள் விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசினார்கள்.

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்... ஈடுபட்ட பள்ளி சிறுவர்கள்... வாய் தகராறினால் இப்படி பண்ணுவதா?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  10 April 2023 2:27 AM GMT

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் தான் கல்யாண சுந்தரம். இவர் தன்னுடைய வீட்டில் மேல் மாடியில் வசித்து வருகிறார் இவருடைய கீழ் தளத்தில் உள்ள வீட்டை அதை ஊரைச் சேர்ந்த கட்டிட காண்ட்ராக்டர் ஆன கர்ணன் என்பவருக்கு வாடகைக்கு விட்டு இருக்கிறார். குறிப்பாக நள்ளிரவில் நேற்று இவர்கள் வீட்டில் குறிப்பாக கர்ணன் இருக்கின்ற வீட்டின் மீது மூன்று சிறுவர்கள் பெட்ரோல் குண்டை வீசி இருக்கிறார்கள். இந்த பெட்ரோல் குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.


சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து இருக்கிறார்கள். பெட்ரோல் கொண்டு வீசப்பட்ட வீட்டில் முன் பகுதியில் உள்ள சுவிட்சு பாக்ஸ் தீப்பிடித்து இருந்தது, இதனை கண்டவர்கள் தண்ணீரை ஊற்றி அணைத்து காவல் நிலையத்திற்கு இது பற்றி தகவல் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் அதற்குள் அதை நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டிருக்கிறார்கள். போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்ட இடத்திற்கு உடனடியாக மோப்ப நாய்களை வரவழைத்து பிடித்து இருக்கிறார். ஆனால் அடையாளம் யார் என்று தெரியவில்லை.


இதற்கு சம்பவம் நடந்து வீட்டின் அருகே பொருத்தப்பட்ட கேமராவில் பார்த்த பொழுது சுமார் மூன்று பாட்டில்களுடன் நடந்து ஒன்று வந்த சிறுவர்கள் இதனை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ஒரு சம்பவத்தில் 16,17, 18 வயது சிறுவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக கர்ணனுடைய மகனுக்கு இவர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இதை செய்வதாக அவர்கள் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் கைது செய்யப்பட்ட தற்பொழுது காவல் நிலையத்தில் இருக்கிறார்கள்.

Input & Image courtesy: ABP News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News