Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகப் பெண்களின் சக்தியின் தீவிரத்தை காண்கிறேன் - பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

தமிழகத்தில் பெண்கள் சக்தி இந்திய வீரத்தை என்னால் காண முடிகிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழகப் பெண்களின் சக்தியின் தீவிரத்தை காண்கிறேன் - பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  12 Nov 2022 3:51 AM GMT

திண்டுக்கலில் காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அதற்கு முன்பு தமிழகத்திற்கு குறிப்பாக மதுரைக்கு வருகை தரும் பிரதமருக்கு ஏராளமான வரவேற்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. வழி நெடுகிலும் பாஜக தொண்டர்கள் மற்றும் மகளிர் அணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. "வணக்கம் மோடி" என்ற ஹேஷ்டாக் 1 மில்லியன் பெயரால் பதிவிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


இது பற்றி விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், தமிழகத்தில் பெண்களின் சக்தியை தீவிரத்தை காண்கிறேன் என்று கூறுகிறார். மேலும் காந்தியின் முக்கியமான கோட்பாடுகளில் ஒன்றான கிராமத்தின் ஆத்மா, நகரத்தின் வசதி என்பதுதான் என்பதில் அரசு கவனமாக இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். இன்று பட்டம் பெரும் அனைத்து இளைய மற்றும் பிரகாசமான மனங்களை நான் வாழ்த்துகிறேன். பெற்றோர் ஆசிரியர்கள் மற்றும் இதர ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் தியாகத்தினால் இன்று வெற்றி சாத்தியமானது என்று கூறி இருக்கிறார்.


மகாத்மா காந்திகான சிறந்த அஞ்சலி அவரது இருதயத்திற்கு நெருக்கமான சந்தைக்கு பணியாற்றுவதாகும. நீண்ட கால காது நிராகரிக்கப்பட்டு மகாத்மா காந்தியின் சிறந்த அஞ்சலி அவரது இருதயத்திற்கு நெருக்கமான சந்தைக்கு பணியாற்றுவதாகும். நீண்ட கால காது நிராகரிக்கப்பட்டு வருகிறது. தேசத்துக்கான காதி அழகிய ஆடைகளுக்கான காதி என்று வழிமொழிகளுடன் நாம் இன்று தேசத்தை வழி நடத்தி செல்கின்றோம். காதி பொருட்களின் விற்பனை தற்பொழுது 300 சதவீதம் அதிகரித்துள்ளது. இது அரசின் முன் முயற்சி தான் நடந்த சாத்தியமாகும்.

Input & Image courtesy: Hindu News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News