Kathir News
Begin typing your search above and press return to search.

திருவண்ணாமலை: 100 சதவீத குடிநீர் பெற்ற வெள்ளேரி ஊராட்சி மக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

இன்று (அக்டோபர் 2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாட்டில் 100 சதவீதம் குடிநீர் இணைப்பு பெற்ற கிராம ஊராட்சி மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

திருவண்ணாமலை: 100 சதவீத குடிநீர் பெற்ற வெள்ளேரி ஊராட்சி மக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

ThangaveluBy : Thangavelu

  |  2 Oct 2021 9:25 AM GMT

இன்று (அக்டோபர் 2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாட்டில் 100 சதவீதம் குடிநீர் இணைப்பு பெற்ற கிராம ஊராட்சி மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

தமிழகத்தில், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள வெள்ளேரி கிராம ஊராட்சி மக்களிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் வெள்ளேரி ஊராட்சி மன்ற தலைவர் சுதா, மாவட்ட ஆட்சியர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

வெள்ளேரி கிராமத்தில் 414 வீடுகள் உள்ளது. அனைத்து வீடுகளுக்கும் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலமாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி பேசியதாவது: ஜல்ஜீவன் திட்டம் என்பது அனைத்து தரப்பு மக்களும் குடிநீர் இணைப்பு ஏற்படுத்துவதற்காக துவங்கப்பட்டது. அனைவரும் பங்கேற்பதற்கு இந்த இயக்கம் உதவும்.

மேலும், கிராமங்கள் அனைத்து பெண்களால் நடத்தப்படும் ஒரு இயக்கமாகும். பொதுமக்கள் பங்கேற்பு காரணமாக மிகப்பெரிய இயக்கமாக மாறியது. அனைத்து தரப்பு தகவல்களும் ஜல்ஜீவன் செயலியில் உள்ளது. தற்போது வரை 5 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளை காட்டிலும், கடந்த 2 ஆண்டுகளில் அதிகமான பணிகளை செய்துள்ளோம்.

மேலும், ரயில்கள் மற்றும் டேங்கர் லாரிகள் மூலமாக நாட்டின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு தண்ணீர் எடுத்து செல்லும் நிலை ஏற்படக்கூடாது. இதனை அனைவரும் உறுதி செய்ய வேண்டும்.

கிராம பஞ்சாயத்துக்கு அதிகமான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் நாம் குடிநீர் வழங்க வேண்டும். சுத்தமான குடிநீர் வழங்குவதற்காக நான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோதே முன்னுரிமை கொடுத்தேன். எனவே குடிநீரை சேமிப்பதற்காக பொதுமக்கள் தங்களின் பழக்க வழக்கங்களை மாற்றி கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி 1.5 லட்சம் சுகாதார மையங்கள் கட்டப்பட்டுள்ளது. 300க்கும் அதிகமான பயோ காஸ் திட்டங்களை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Source: Dinamalar

Image Courtesy: ANI


Next Story
கதிர் தொகுப்பு
Trending News