Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை: சிறுமிகளை கொடுமை செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இஸ்லாமிய தம்பதி கைது!

திரிபுராவை சேர்ந்த 4 சிறுமிகளை சென்னைக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இஸ்லாமிய தம்பதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை: சிறுமிகளை கொடுமை செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இஸ்லாமிய தம்பதி கைது!

ThangaveluBy : Thangavelu

  |  7 Feb 2022 12:26 PM GMT

திரிபுராவை சேர்ந்த 4 சிறுமிகளை சென்னைக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இஸ்லாமிய தம்பதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் ஒருவர் கடந்த மாதம் 28ம் தேதி பூக்கடை மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் திரிபுராவைச் சேர்ந்த சமீமா கத்தூன் அவரது கணவர் அன்வர் உசேன் ஆகியோர் சிறுமிகளை வேலை வாங்கி தருவதாக சென்னைக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக குறிப்பிட்டிருந்தார். உடனடியாக சிறுமிகளை மீட்டு அந்த தம்பதிகளை கைது செய்ய வேண்டும் என புகாரில் குறிப்பிட்டிருந்தார். மேலும், சிறுமிகளை சென்னை, கேளம்பாக்கத்தில் வீடு வாடகைக்கு எடுத்து அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாகவும், அங்கு சிறுமிகளை அடித்து, துன்புறுத்தி கொடுமை செய்துள்ளனர். சிறுமிகளின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து இஸ்லாமிய தம்பதிகள் மிரட்டி வருவதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், 4 சிறுமிகளையும் இஸ்லாம் தம்பதிகள் பெங்களூருவில் உள்ள புரோக்கரிடம் விற்பனை செய்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அழைத்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலை தொடர்ந்து சோதனை செய்தபோது போலீசாரிடம் இஸ்லாமிய தம்பதிகள் சிக்கிக்கொண்டனர். அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த செல்போன்களை பறிமுதல் செய்து வீடியோ குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், தப்பியோடி நபரையும் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: News 18 Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News