Kathir News
Begin typing your search above and press return to search.

கட்டு கட்டாக 500 ரூபாய் கள்ள நோட்டு, கஞ்சா பறிமுதல் - நான்கு பேர் கைது!

கட்டு கட்டாக சிகிச்சை 500 ரூபாய் கள்ள நோட்டுகளை கொண்ட 4 பேர் கைது.

கட்டு கட்டாக 500 ரூபாய் கள்ள நோட்டு, கஞ்சா பறிமுதல் - நான்கு பேர் கைது!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  12 Oct 2022 2:07 AM GMT

தென்காசி புதிய பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் தென்காசி உடையார் சேர்ந்த ராஜா மகன் மணி செல்வன் மற்றும் செங்கோட்டை பெரியப்பிள்ளை கோவில் தெருவை சேர்ந்த ஆனந்த மகன் மணிகண்டன் என தெரியவந்தது. அவர்களிடம் ஒரு லட்சத்தை 20 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 4 கிலோ கஞ்சாவும், 2 லட்சத்திற்கான 500 ரூபாய் கள்ள நோட்டுகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


இதில் அடுத்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். கஞ்சாவையும், கள்ள நோட்டுகளையும் பறிமுதல் செய்தன. செங்கோட்டை அருகே பெரிய பிள்ளை வலசை சாலையில் அமைந்துள்ள கருப்பன சாமி கோவில் அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்பொழுது அந்த பகுதியில் இரண்டு பேரையும் போலீசார் மடக்கி மடக்கிப் பிடித்தனர்.


விசாரணையில் செங்கோட்டை அருகே உள்ள தெற்கு வீடு ஆர்.சி. தெருவை செய்த பிரகலநாதன் விஸ்வநாதபுரத்தை சேர்ந்த மாரிமுத்து என்பது குறித்து கருத்து வந்தது. இரு பெயரிடமும் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதனை தொடர்ந்து ஆய்வு செய்தபோது அவர் அவை கள்ள நோட்டு என்பது தெரிவந்தது இதை எடுத்து சுமார் 2.25 லட்சத்திற்கான கள்ள நோட்டுகளையும் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக கைது செய்தவுடன் அந்த இரண்டு பேரையும் தற்போது போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Input & Image courtesy: Vikatan News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News