Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க. ஆட்சியின் அவலம்: நடுரோட்டில் வெட்டிக்கொல்லப்பட்ட எஸ்.ஐ !

திருச்சி மாவட்டம், நவல்பட்டு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நடுரோட்டில் வெட்டிக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் சாதாரண மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சியில் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தி.மு.க. ஆட்சியின் அவலம்: நடுரோட்டில் வெட்டிக்கொல்லப்பட்ட எஸ்.ஐ !

ThangaveluBy : Thangavelu

  |  21 Nov 2021 6:37 AM GMT

திருச்சி மாவட்டம், நவல்பட்டு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நடுரோட்டில் வெட்டிக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் சாதாரண மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சியில் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருச்சி மாவட்டம், நவல்பட்டு சோழமாநகர் பகுதியில் வசித்து வந்தவர் பூமிநாதன். இவருக்கு கவிதா என்ற மனைவியும், குகன் என்ற மகனும் உள்ளனர். இதனிடையே பூமிநாதன் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் பூமிநாதன் நேற்று இரவு நவல்பட்டு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நள்ளிரவு 2 மணியளவில் மூன்று பேர் கொண்ட கும்பல் இரண்டு சக்கர வாகனங்களில் ஆடுகளுடன் வந்துள்ளனர். அவர்களை பூமிநாதன் தடுத்துள்ளார். ஆனால் அந்த கும்பல் நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த மர்ம கும்பலை பூமிநாதன் துரத்தி சென்று பிடித்துள்ளார். அப்போது மற்ற கும்பல் பூமிநாதனை சராமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளது. பாதுகாப்பு கொடுக்கும் போலீசாருக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத நிலைதான் உருவாகியுள்ளது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News