Kathir News
Begin typing your search above and press return to search.

ஜன.,17 முதல் போலியோ சொட்டுமருந்து.. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்.!

ஜன.,17 முதல் போலியோ சொட்டுமருந்து.. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்.!

ஜன.,17 முதல் போலியோ சொட்டுமருந்து.. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 Jan 2021 12:07 PM GMT

வருகின்ற ஜனவரி 17ம் தேதி முதல் 3 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலீயோ சொட்டு மருந்து வழங்கப்படுவது வழக்கம். தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் சொட்டு மருந்து வழங்கப்படும்.

இந்த மையங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை வரை செயல்படும். மேலும் போக்குவரத்து வசதி இல்லாத ஊர்களில் நடமாடும் செவிலியர்கள் மூலமாக சொட்டு மருந்து வழங்க அரசு சார்பில் ஏற்படுத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு ஜனவரி 17 முதல் 3 நாட்களுக்கு போலீயோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News