Kathir News
Begin typing your search above and press return to search.

பொள்ளாச்சி: அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை மாயம்!

பொள்ளாச்சி: அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை மாயம்!

ThangaveluBy : Thangavelu

  |  3 July 2022 1:10 PM GMT

பொள்ளாச்சி அரசு பொது மருத்துவமனையில் பிறந்த நான்கு நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று கடத்தப்பட்டதால் தாய் மட்டுமின்றி உறவினர்களும் அதிர்ச்சியில் உள்ளனர். பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் யூனிஸ், இவரது மனைவி திவ்யபாரதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை அவருக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதன் பின்னர் தாய் சேர் இரண்டு பேரும் சிகிச்சை பிரிவில் இருந்துள்ள நிலையில், இன்று (ஜூலை 3) அதிகாலை மர்ம நபர்கள் குழந்தையை கடத்திச் சென்றுள்ளனர். கண் விழித்து பார்த்தபோது குழந்தை இல்லாதததை கண்டு தாய் அதிர்ச்சியடைந்தார்.

இந்த சம்பவம் காட்டூத்தீ போன்று மருத்துவமனை வளாகம் முழுவதும் தொற்றிக்கொண்டது. இதனால் உறவினர்கள் மருத்துவமனை முன்பாக குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே பல கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள குழந்தைகள் மகப்பேறு நல பிரிவு கட்டிடத்தில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படாமல் இருந்துள்ளது. இதனை குழந்தை திருடர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி குழந்தையை திருடி சென்றுள்ளனர் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சி.சி.டி.வி. கேமரா இல்லாததால் கடத்தப்பட்ட திருடர்களை பிடிப்பதில் போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்கள் ஒரு புறம் குழந்தையை திருடியர்வர்களை கண்டுப்பிடித்து மீட்க வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளனர்.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News