Kathir News
Begin typing your search above and press return to search.

தருமபுரியில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி.. அமைச்சர் கே.பி.அன்பழகன் துவக்கி வைப்பு.!

தருமபுரியில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி.. அமைச்சர் கே.பி.அன்பழகன் துவக்கி வைப்பு.!

தருமபுரியில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி.. அமைச்சர் கே.பி.அன்பழகன் துவக்கி வைப்பு.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Jan 2021 11:15 AM GMT

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அட்டை தாரர்களுக்கும் இன்று முதல் பொஙகல் பரிசாக ரூ.2,500 மற்றும் அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட தொகுப்புகளை தமிழக உயர்கல்வித்துறை மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட பெரியாம்பட்டியில் பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக உயர்கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சரும் தருமபுரி மாவட்ட கழக செயலாளருமான கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசாக, ரூ.2,500 மற்றும் கரும்பு, அரிசி, சர்க்கரை உள்ளிட்ட தொகுப்பினை வழங்கினார்.

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள். கூட்டுறவுத்துறை தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசியதாவது: பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்காக தமிழக முதலமைச்சர் ரூ.2,500 மற்றும் அரிசி, சர்க்கரை, உள்ளிட்ட பொருட்களை அறிவித்தார். அதனடிப்படையில் இன்று முதல் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.

விவசாயிகளுக்காக தமிழக முதலமைச்சர் பல்வேறு வகையான சலுகைகளை அறிவித்து வருகிறார். அவரது அறிவிப்பால் லச்சக்கணக்கான விவசாயிகள் பங்குபெற்று வருகின்றனர். மேலும், அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் சேருவதற்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அவரது அறிவிப்புக்கு பின்னர் தருமபுரி மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரியில் 20க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. இதற்கு காரணம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவார். எனவே ஏழை மக்களுக்காகவே பல திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது என்றார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News