Kathir News
Begin typing your search above and press return to search.

தேனியில் வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை: கணவன் கைது! மாமியாருக்கு போலீசார் வலை வீச்சு!

தேனியில் வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனியில் வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை: கணவன் கைது! மாமியாருக்கு போலீசார் வலை வீச்சு!

ThangaveluBy : Thangavelu

  |  18 Oct 2021 8:19 AM GMT

தேனியில் வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் 34, இவர் கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனிடையே திருச்சியை சேர்ந்த முத்துலட்சுமி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், மூன்று மாத கர்ப்பிணியான முத்துலட்சுமி திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். முதலில் குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக முத்துலட்சுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து திருமணமாக 4 ஆண்டுகள் ஆகியுள்ளதால் பெரியகுளம் சார் ஆட்சியர் விசாரணைக்கு போலீசார் பரிந்துரைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து வழக்கை விசாரணை செய்த சார் ஆட்சியர் ரிஷப், வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது உறுதி செய்தார். இதன் பின்னர் வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்து கணவர் பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு உறுதுணையாக இருந்த தாய் பிச்சையம்மாளை போலீசார் தேடி வருகின்றனர். கர்ப்பிணி பெண் ஒருவர் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தேனி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சௌர்ஸ் Puthiyathalamurai

Image cCourtesy:The Indian Express


Next Story
கதிர் தொகுப்பு
Trending News