Kathir News
Begin typing your search above and press return to search.

தேசிய கல்விக் கொள்கை தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவும் - பிரதமர் மோடி

தேசிய கல்விக் கொள்கை தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவும் - பிரதமர் மோடி

ThangaveluBy : Thangavelu

  |  26 May 2022 2:30 PM GMT

தமிழகத்திற்கு ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னைக்கு வருகை புரிந்தார். பிரதமர் மோடி நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வருகை புரிந்தார். அப்போது தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பிரதமர் மோடி பேசும்போது, தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம். தமிழக மண் என்பது சிறப்பு வாய்ந்தவை ஆகும். தமிழகத்திற்கு வருவது என்பது சிறப்பான ஒன்று.

தமிழகத்தில் உள்ளவர்கள் ஒவ்வொரு துறைகளிலும் தலைச் சிறந்தவர்களாக விளங்கி வருகின்றனர். தமிழ் மொழி நிலையானது, நித்தியமானது. தமிழ் கலாச்சாரம் உலகளாவி பரவியுள்ளது. மிகவும் பழமை வாய்ந்த மொழி தமிழ் ஆகும். உலகளவில் புகழ்பெற்றுள்ளது.

அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை, கனடா, மதுரை, மலேசியா, நாமக்கல், நியூயார்க், சேலம், தென்னாப்பிரிக்கா வரை தமிழ் கலாச்சாரம் பரவியுள்ளது. மேலும், தேசிய கல்விக் கொள்கை தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Source, Image Courtesy: Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News