Kathir News
Begin typing your search above and press return to search.

சசிகலா மற்றும் இளவரசி விடுதலை! தேதி வெளியிட்ட சிறை நிர்வாகம்!

சசிகலா மற்றும் இளவரசி விடுதலை! தேதி வெளியிட்ட சிறை நிர்வாகம்!

சசிகலா மற்றும் இளவரசி விடுதலை! தேதி வெளியிட்ட சிறை நிர்வாகம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Jan 2021 1:28 PM GMT

சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற இளவரசி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் சிறையில் இருந்து விரைவில் வெளியாவார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பிப்ரவரி மாதம் 5ம் தேதி இளவரசி விடுதலை ஆகிறார். வருகின்ற 27ம் தேதி அன்று சசிகலா விடுலை ஆகிறார். அவருக்கு அடுத்தபடியாக இளவரசி விடுதலையாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சிறையில் உள்ள மற்றொரு குற்றவாளியான சுதாகரன் இன்னும் அபராதத்தொகையை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் விடுதலை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News