Kathir News
Begin typing your search above and press return to search.

மின்கம்பியில் உரசிய தனியார் பேருந்து.. சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 5 பேர்.. தஞ்சாவூரில் பயங்கரம்.!

மின்கம்பியில் உரசிய தனியார் பேருந்து.. சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 5 பேர்.. தஞ்சாவூரில் பயங்கரம்.!

மின்கம்பியில் உரசிய தனியார் பேருந்து.. சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 5 பேர்.. தஞ்சாவூரில் பயங்கரம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Jan 2021 3:10 PM GMT

தஞ்சாவூர் அருகே மின்கம்பியில் தனியார் பேருந்து உரசிய சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறை அடுத்துள்ள கண்டியூர் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது வரகூர் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையின் ஓரம் இருந்த மின்கம்பியில் பேருந்து உரசியதாக தெரிகிறது.

இதனால் பேருந்தில பயணம் செய்தவர்களில் 5 பேர் மின்சாரம் தாக்கியது. இதில் அவர்கள் உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், பேருந்தில் பயணம் செய்த 10க்கும் அதிகமானோர்கள் மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புபணிகளில் ஈடுபட்டனர்.

மேலும், படுகாயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு தஞ்சை மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள மக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News