Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை - கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட உடல்

பரமக்குடி அருகில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை - கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட உடல்

Bharathi LathaBy : Bharathi Latha

  |  22 Sep 2022 2:35 AM GMT

ஒட்டபிராடம் அருகே தனியார் பள்ளி விடுதியில் பிளஸ் டூ படிக்கும் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியே பெரும் பரபரப்பை ஏற்படத்தில் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா தெளிசார்நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன். இவருடைய மகள் 12 ஆம் வகுப்பு படிக்கிறார். இவர் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் அருகியுள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி அங்குள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.


இந்நிலையில் நேற்று இரவு அவர் பள்ளியின் விடுதியில் உள்ள கழிவறையில் கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த ஒரு சம்பவம் தற்போது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைப் பார்த்து மற்ற மாணவிகள் அதிர்ச்சியடைந்து உடனடியாக பள்ளி நிர்வாகிகள் இடம் இதனை தெரிவித்துள்ளார்கள். மேலும் இது சம்பவம் பற்றி அறிந்த போலீசாரும் இந்த இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மாணவியின் உடலை அவர்கள் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.


இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தனியார் பள்ளியில் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படத்தில் உள்ளது. இதன் பின்னணியில் யார் உள்ளார்? மாணவி இவ்வளவு பெரிய முடிவை எடுப்பதற்கு யார் அவரை தூண்டி இருப்பார்? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் வழக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது.

Input & Image courtesy: Vikatan News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News