Begin typing your search above and press return to search.
ரேஷன் கடைகளில் இன்று முதல் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்.!
தற்போது நிவாரணம் வழங்கும் பணிகள் நிறைவு பெற்றதால், இன்று முதல் கைவிரல் ரேகை பதிவு முறையில் பொருட்கள் விநியோகம் செய்ய உள்ளது.

By : Thangavelu
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ரேஷன் கடைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கைவிரல் ரேகைப் பதிவு முறை இன்று முதல் மீண்டும் அமலுக்கு வருகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க வரும் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும்.
இந்நிலையில், ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணம் மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டதால் மக்கள் அதிகளவு கூடுவதை தவிர்க்க, நோய்த்தொற்று நடவடிக்கையாக கைவிரல் ரேகை பதிவு முறையானது தற்காலிகமாக நிறுததப்பட்டிருந்தது.
தற்போது நிவாரணம் வழங்கும் பணிகள் நிறைவு பெற்றதால், இன்று முதல் கைவிரல் ரேகை பதிவு முறையில் பொருட்கள் விநியோகம் செய்ய உள்ளது.
Next Story
