Begin typing your search above and press return to search.
பூந்தமல்லியில் 500 வீடுகளில் கழிவுநீருடன் நுழைந்த மழைநீர்: துயரத்தில் மக்கள்!
சென்னையில் நேற்று பெய்த கனமழையால் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் ஆறு போன்று பெருக்கெடுத்து ஓடுகிறது. அதே சமயம் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது

By :
சென்னையில் நேற்று பெய்த கனமழையால் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் ஆறு போன்று பெருக்கெடுத்து ஓடுகிறது. அதே சமயம் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது
அதே போன்று சென்னை, பூந்தமல்லி நகராட்சி அம்மன் கோயில் தெருவில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. அது மட்டுமின்றி அதில் 60 வீடுகளுக்கும் மேலாக கழிவுநீருடன் மழை நீர் உள்ளே புகுந்துள்ளது.
இதனால் தூங்குவதற்கு கூட இடம் இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டள்ளது. மேலும், கழிவு நீரும் வீடுகளை சூழ்ந்துள்ளதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அரசு அதிகாரிகள் நீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Source, Image Courtesy: Puthiyathalaimurai
Next Story