Kathir News
Begin typing your search above and press return to search.

11 மாவட்டங்களில் 2 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும்!

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, செஞ்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், நாமக்கல், விழுப்புரம், தூத்துக்குடி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், சென்னை, மதுரை, திருவள்ளூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

11 மாவட்டங்களில் 2 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும்!

ThangaveluBy : Thangavelu

  |  21 Aug 2021 5:54 AM GMT

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, செஞ்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், நாமக்கல், விழுப்புரம், தூத்துக்குடி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், சென்னை, மதுரை, திருவள்ளூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

நேற்று இரவு முதல் தருமபுரி மாவட்டத்தில், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம் மற்றும் திருவள்ளூரில் புழல், செங்குன்றம், அலமாதி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, புலியூர், அரசம்பட்டி, செல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ஈரோடு, சேலம் ஆகிய 11 மாவட்டங்களில் 2 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.

Source: Daily Thanthi

Image Courtesy: The Times Of India

https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/21101343/rain-will-continue-for-2-hours-in-11-districts-including.vpf

Next Story
கதிர் தொகுப்பு
Trending News