Kathir News
Begin typing your search above and press return to search.

3 நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட ராமேஸ்வரம் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

3 நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட ராமேஸ்வரம் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

ThangaveluBy : Thangavelu

  |  10 Jan 2022 6:15 AM GMT

ராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயிலில் மூன்று நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்டது. இதில் வடமாநில பக்தர்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கோயில்களுக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த மூன்று நாட்களாக பக்தர்கள் இன்றி கோயில் பூஜைகள் நடைபெற்ற நிலையில், இன்று கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து பக்தர்களுக்கும் நேரடியாக சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.


இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக மூடப்பட்டிருந்த இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயில் இன்று திறக்கப்பட்டது. தமிழக பக்தர்களை விட வட மாநில பக்தர்களே அதிகளவு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடற்கரையில் நீராடி தங்களின் நேர்த்திக்கடனை செலுத்திவிட்டு செல்கின்றனர்.

Source, Image Courtesy: Puthiyathalaimurai


Next Story
கதிர் தொகுப்பு
Trending News