Kathir News
Begin typing your search above and press return to search.

"திருப்பூரில் சர்ச்சில் பிரார்த்தனைக்கு வந்த சிறுமியிடம் அத்துமீறிய மதபோதகர்.." ஜெபகூட்டம் நடத்துவதாக அழைத்து அரங்கேற்றிய சம்பவம்!

திருப்பூரில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த மதபோதகர் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

திருப்பூரில் சர்ச்சில் பிரார்த்தனைக்கு வந்த சிறுமியிடம் அத்துமீறிய மதபோதகர்.. ஜெபகூட்டம் நடத்துவதாக அழைத்து அரங்கேற்றிய சம்பவம்!

MuruganandhamBy : Muruganandham

  |  7 Jan 2022 5:30 AM GMT

திருப்பூரில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மதபோதகரை காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்தவர் 36வயதான சாமுவேல் என்பவர், "பெத்தேல் எழுப்புதல் தேவ திருச்சபை"யின் மதபோதகராக பணியாற்றி வந்துள்ளார். சிறிய அளவிலான சர்ச் நடத்தி, அங்கு பிரார்த்தனைக்கு வந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்திருக்கிறார்.

இது குறித்து சிறுமியின் தாய் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், சாமுவேல் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் சட்டப்பிரிவின் கீழ் காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இப்படி ஒரு செயலை அரங்கேற்றியிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல் துறையினர் கைது செய்ய வந்த போது, தனக்கு உடல்நலக்குறைவு உள்ளதாக கூறி, சாமுவேல் தப்பிக்க முயற்சி செய்துள்ளார். அதன் காரணமாக கைது நடவடிக்கை கொஞ்சம் தள்ளிப்போனது. இருந்த போதிலும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, காவல் துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News