Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ்நாட்டில் தலைவர்களின் சிலைகளை அகற்றுங்கள்! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வேலூர் மாவட்டம், அரக்கோணம் தாலுகாவிற்குட்பட்ட கிராமத்தில் அரசு அனுமதி இன்றி புறம்போக்கு நிலத்தில் அம்பேத்கர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்றும்படி தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார்.

தமிழ்நாட்டில் தலைவர்களின் சிலைகளை அகற்றுங்கள்! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ThangaveluBy : Thangavelu

  |  7 Oct 2021 12:34 PM GMT

வேலூர் மாவட்டம், அரக்கோணம் தாலுகாவிற்குட்பட்ட கிராமத்தில் அரசு அனுமதி இன்றி புறம்போக்கு நிலத்தில் அம்பேத்கர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்றும்படி தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார்.

இதனை எதிர்த்து வக்கீல் வீரராகவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், நெடுஞ்சாலைகளில் சிலைகளை வைக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு உள்ளது. இதனால் சிலையை அகற்றியதில் எந்த தவறும் இல்லை என்றார். இதனை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

மேலும், நீதிபதிகள் கூறும்போது, தமிழகம் முழுவதும் பொது இடங்கள், சாலை மற்றும் புறம்போக்கு, அரசு இடங்களில் உள்ள தலைவர்கள் சிலைகளை மூன்று மாதங்களில் அடையாளம் கண்டுப்பிடித்து அகற்ற வேண்டும். பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் சிலைகள் மற்றும் கட்டுமானங்களை அமைப்பது பற்றி விரிவான விதிகளையும் பின்பற்ற வேண்டும்.

அதே போன்று அனுமதி பெற்று பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகளை அப்புறப்படுத்தி, பூங்கா உள்ளிட்ட இடங்களில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது பற்றிய அறிக்கையை 6 மாதங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy:India Today


Next Story
கதிர் தொகுப்பு
Trending News