Kathir News
Begin typing your search above and press return to search.

கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., அதிரடி மாற்றம்!

கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., அதிரடி மாற்றம்!

ThangaveluBy : Thangavelu

  |  19 July 2022 1:44 PM GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. அப்பள்ளியில் தங்கி விடுதியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இப்போராட்டத்தில் பல தன்னார்வலர்கள், மாணவர் அமைப்புகள் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர். அப்போது திடீரென்று அந்த ஊர்வலம் கலவரமாக மாறியது. பள்ளி சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டது. இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் அனைத்தும் தீக்கறையாக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் தி.மு.க., மீது குற்றம்சாட்டியது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய ஆட்சியராக ஷ்ரவன்குமார் நியமித்த தலைமைச்செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அதே போன்று கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி., செல்வக்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News