Kathir News
Begin typing your search above and press return to search.

மழையில் நனைந்து மயங்கி கிடந்த கல்லறை ஊழியரை மீட்டு தோளில் சுமந்து சென்ற பெண் இன்ஸ்பெக்டர்!

சென்னை டி.பி. சத்திரம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் 28, இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லறை தோட்டத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு மழையில் நனைந்துள்ளார். இதனால் வலிப்பு நோய் ஏற்பட்டு கல்லறை மீது மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

மழையில் நனைந்து மயங்கி கிடந்த கல்லறை ஊழியரை மீட்டு தோளில் சுமந்து சென்ற பெண் இன்ஸ்பெக்டர்!

ThangaveluBy : Thangavelu

  |  11 Nov 2021 10:06 AM GMT

சென்னை டி.பி. சத்திரம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் 28, இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லறை தோட்டத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு மழையில் நனைந்துள்ளார். இதனால் வலிப்பு நோய் ஏற்பட்டு கல்லறை மீது மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து டிபி சத்திரம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டபோது அங்கு மயக்கம் போட்டுள்ள ஊழிரை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தனது தோளில் சுமந்து சென்று ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இது பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த ஒருவரை உடனடியாகா காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பெண் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Source, Image Courtesy: Daily Thanthi


Next Story
கதிர் தொகுப்பு
Trending News