Kathir News
Begin typing your search above and press return to search.

சாலை பாதுகாப்பு: திருநெல்வேலி மாநகர காவல்துறைக்கு முதலமைச்சர் விருது வழங்கி பாராட்டு.!

சாலை பாதுகாப்பு: திருநெல்வேலி மாநகர காவல்துறைக்கு முதலமைச்சர் விருது வழங்கி பாராட்டு.!

சாலை பாதுகாப்பு: திருநெல்வேலி மாநகர காவல்துறைக்கு முதலமைச்சர் விருது வழங்கி பாராட்டு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Feb 2021 9:29 AM GMT

தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு அவர்களை ஊக்குவிக்கின்ற வகையில் விருதுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், இந்த ஆண்டில் சாலை பாதுகாப்பு செயல்பாடுகளில் சிறந்ததாக விளங்கியதற்காக திருநெல்வேலி மாநகர காவல்துறை தேர்வு செய்யப்பட்டது.
இதனையடுத்து சென்னையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நெல்லை மாநகர காவல் ஆணையாளரிடம் விருதினை வழங்கி கவுரவித்தார்.

இந்த விருது மற்ற காவலர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் விபத்து இல்லாமல் உருவாக்குவது காவலர்கள் மட்டுமின்றி வாகன ஓட்டிகளும் ஒத்துழைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News