Begin typing your search above and press return to search.
ரூ.12,110 கோடி விவசாய கடன் தள்ளுபடி.. பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு.!
ரூ.12,110 கோடி விவசாய கடன் தள்ளுபடி.. பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு.!

By :
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 2ம் தேதி சென்னை கலைவானர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பல அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது விவசாய கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். ரூ.12,110 கோடி விவசாய பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி 16.43 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு விவசாயிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
Next Story